/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குறைகளை கூறுவோம்... தீர்வு காண்போம் பகுதிக்காக........
/
குறைகளை கூறுவோம்... தீர்வு காண்போம் பகுதிக்காக........
குறைகளை கூறுவோம்... தீர்வு காண்போம் பகுதிக்காக........
குறைகளை கூறுவோம்... தீர்வு காண்போம் பகுதிக்காக........
ADDED : மே 30, 2024 04:04 AM
ரோட்டில் தேங்கும் கழிவுநீர்
வேடசந்துார் கொல்லம் பட்டறை அருகே காவிரி குடிநீர் குழாயில் 24 மணி நேரமும் தண்ணீர் பிடிப்பதால் வழிந்து ஓடும் தண்ணீர் ரோட்டோரம் செல்கிறது.
- ஆர்.காவியா, வேடசந்துார்.
ஏற்பாடு செய்யப்படும்
தண்ணீர் பிடிக்கும்போது வழிந்து வெளியேறாத வகையில் மாற்று ஏற்பாடு செய்யப்படும்
- மேகலா ,பேரூராட்சி தலைவர்,வேடசந்துார் .
பயன்பாடற்ற சுகாதார வளாகம்
ஒட்டன்சத்திரம் நகராட்சி 2வது வார்டு நாகணம்பட்டியில் உள்ள சுகாதார வளாகம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
- வேலுச்சாமி,ஒட்டன்சத்திரம்.
தீர்வு காணப்படும்
நாகணம்பட்டியில் உள்ள சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
- அருள்மணி,கவுன்சிலர்,ஒட்டன்சத்திரம்.
சேதமான ரோடு
வேம்பார்பட்டியிலிருந்து மொட்டையகவுண்டன்பட்டி வரை செல்லும் ரோடு மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதை சீரமைக்க வேண்டும்.
- கெப்பையன்,மொட்டையாகவுண்டன்பட்டி.
நடவடிக்கை எடுக்கப்படும்
சேதமான ரோடை சீரமைக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
- கந்தசாமி, ஊராட்சி தலைவர்,வேம்பார்பட்டி.
-------------------------------------------- புதர்களால் அவதி
காணப்பாடி ராமநாதபுரத்தில் இருக்கும் பாறைக்குழியில் புதர்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளதால் சலவை தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர். இவற்றை அகற்ற வேண்டும்.
-சந்திரசேகர், காணப்பாடி.
நடவடிக்கை எடுக்கப்படும்
ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
வீரமணி, ஊராட்சி செயலாளர், காணப்பாடி.