/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குறைகளை கூறுவோம்...தீர்வு காண்போம்
/
குறைகளை கூறுவோம்...தீர்வு காண்போம்
ADDED : ஏப் 21, 2024 04:40 AM
சேதமான ரோட்டால் அவதி
பழநி பட்டத்து விநாயகர் கோயில் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. வாகன விபத்துக்கள் அதிகளவில் நடப்பதால் ரோட்டை சீரமைக்க வேண்டும்.
---மகேஷ், பழநி
விரைவில் நடவடிக்கை
புதிய ரோடு போட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
- -ஜென்னதுல்ப்பதோஷ், நகராட்சி கவுன்சிலர், பழநி.
டூவீலர்களால் நெரிசல்
கோபால்பட்டி அய்யாபட்டி ரோட்டில் வணிக நிறுவனங்களுக்கு முன் டூவீலர்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து அபாயம் உள்ளது.
- -அரவிந்த்குமார், கோபால்பட்டி.
நடவடிக்கைக்கு ஏற்பாடு
டூவீலர்களை நிறுத்தி இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்.
-கந்தசாமி, ஊராட்சி தலைவர், வேம்பார்பட்டி.
இரவு பயணத்தில் ஆபத்து
அய்யலுார் காக்காயன் குளத்துப்பட்டியில் பல இடங்களில் தெரு விளக்கு இல்லாததால் இரவு பயணத்தில் ஆபத்து நிலவுகிறது. இதை சீரமைக்க வேண்டும்.
- -கருப்பன், காக்காயன் குளத்துப்பட்டி.
ஆய்வுக்குப்பின் நடவடிக்கை
தேவைக்கேற்ப தெருவிளக்குகள் அமைத்து தர ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
-தனலட்சுமி, பேரூராட்சி கவுன்சிலர், அய்யலுார்.
பாதியில் நிற்கும் பணி
ஒட்டன்சத்திரம் நகராட்சி கஸ்துாரி நகர் வடக்கு பகுதியில் தெருவிளக்கு அமைக்க மின்கம்பம் நடப்பட்டு பல மாதங்களாகியும் பணி முழுமையடையாமல் பாதியில் உள்ளது.
- --ஸ்ரீகுமார், ஒட்டன்சத்திரம்.
விரைவில் பணிகள் முடியும்
மின்கம்ப பணிகளை விரைவில் முடித்து இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- -திருமலைசாமி, நகராட்சி தலைவர், ஒட்டன்சத்திரம்.
ரோட்டோரத்தில் குப்பை
கொடைக்கானல் வத்தலகுண்டு மெயின் ரோட்டில் உள்ள அடுக்கம் ஊராட்சியில் ரோட்டோரம் குப்பை கொட்டப்படுகிறது. தொற்று அபாயம் உள்ளது.
- -சக்திவேல், அடுக்கம்.
உடனடியாக அகற்றம்
கொடைக்கானல் வத்தலகுண்டு ரோட்டில் குப்பையை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
-கண்ணன், ஊராட்சி தலைவர், அடுக்கம்.

