/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குறைகளை கூறுவோம்...தீர்வு காண்போம்
/
குறைகளை கூறுவோம்...தீர்வு காண்போம்
ADDED : மே 06, 2024 12:53 AM
குடிநீர் சப்ளையில் சிக்கல்
குறவன்பாறை பகுதியில் வசிக்கும் குடியிருப்போருக்கு குடிநீர் சப்ளை நீண்ட நாள் இடைவெளியில் வருகிறது. இதனால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -மகேஷ், பழநி.
நடவடிக்கை எடுக்கப்படும்
ஒட்டுமொத்தமான பழநி நகரின் பிரச்னையாக இது உள்ளது. எனவே நகராட்சி கூட்டத்தில் ஆலோசித்து பிரச்னைக்கான தீர்வு காணப்படும்.
- --விமலபாண்டியன், கவுன்சிலர், பழநி
தெருவிளக்கு தேவை
தருமத்துப்பட்டி ஊராட்சி அலுவலகம் முதல் பஸ் ஸ்டாப் வரையான பகுதிகளில் போதிய தெருவிளக்கின்றி இருள் நிலவுகிறது. இதனால் விபத்து அபாயம் பெருகியுள்ளது. மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -சரவணன், தருமத்துப்பட்டி
மின்விளக்கு பொருத்தப்படும்
ஆய்வுக்கு பின் தேவையான இடங்களில் மின்விளக்கு பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- -மருதமுத்து, ஊராட்சி தலைவர், தருமத்துப்பட்டி
சேதமடைந்த ரோடு
வேடசந்துார் நேருஜி நகர் பூங்கா ரோட்டில், புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் அடுத்துள்ள பகுதியில் உள்ள ரோடானது மேடு, பள்ளமாக உள்ளது.இதை சீரமைத்து புதிய தார் ரோடு அமைத்து தர வேண்டும்.
-சந்திரசேகர், வேடசந்துார்
விரைவில் சீர்படுத்தப்படும்
புதிய ரோடு பணிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விரைவில் சீரமைக்கப்படும்.
-மேகலா, பேரூராட்சி தலைவர், வேடசந்துார்.