ADDED : மே 14, 2026 09:21 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், மே 15-
திண்டுக்கல் அருகே நரசிங்கபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் சமூக நலஅறக்கட்டளை, கல்வி தன்னார்வல தொண்டு நிறுவனம் இணைந்து செவிலியர் தின விழா கொண்டாடினர்.அரசு மருத்துவர்கள் பிரியதர்ஷினி, செல்வா மணிகண்டன் தலைமை வகித்தனர். கல்வி தன்னார்வலர் அமைப்பு தலைவர் மகேந்திரபிரபு முன்னிலை வகித்தார், அப்துல்கலாம் அறக்கட்டளை தலைவர் மருதைகலாம், காமன்வெல்த் கிளப் மாவட்டத் தலைவர் மரியால், அறக்கட்டளை திட்ட மேலாளர் இன்னாசி ராஜா பேசினர். சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிர்வாகிகள் முத்துக்கார்த்தி, திருப்பதி பங்கேற்றனர்.
