sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநி முருகன் கோயிலுக்கு மேளதாளத்துடன் சீர்வரிசை

/

பழநி முருகன் கோயிலுக்கு மேளதாளத்துடன் சீர்வரிசை

பழநி முருகன் கோயிலுக்கு மேளதாளத்துடன் சீர்வரிசை

பழநி முருகன் கோயிலுக்கு மேளதாளத்துடன் சீர்வரிசை


ADDED : பிப் 23, 2025 02:12 AM

Google News

ADDED : பிப் 23, 2025 02:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு சீர்வரிசையாக பல்வேறு பொருட்களை குறவர் இன மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

இக்கோயிலில் தைப்பூசத்திருவிழா பிப்., 14 ல் நிறைவுற்றது. இருப்பினும் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

நேற்று திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள குறவர் இன மக்கள், வள்ளிக்கு சீர்வரிசையாக வழங்க தேன், திணை மாவு, மா, பலா, வாழை உள்ளிட்ட பொருட்களை பாரம்பரிய முறையில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். இவர்களுடன் கேரளாவை சேர்ந்தவர்களும் வந்தனர். சிலர் காவடி எடுத்து, அலகு குத்தியும் வந்தனர்.

பழநி பஸ் ஸ்டாண்டில் இருந்து துவங்கிய இந்த ஊர்வலத்தில் பாத விநாயகர் கோயில் வரும் வரை பலர் வேலன் ஆட்டம், கும்மியாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம் ஆடினர். பாத விநாயகர் கோயிலில் வழிபாடு முடித்து முருகன் கோயில் சென்று தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us