ADDED : பிப் 15, 2025 02:23 AM

பழநி:பழநி முருகன் கோயிலில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் தரிசனம் செய்தார்.
பழநிக்கு வந்த பவன்கல்யாண் ரோப் கார் மூலம் முருகன் கோயிலுக்கு சென்றார். இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின் உச்சி கால பூஜையில் பங்கேற்றார். தொடர்ந்து போகர் சன்னிதியில் வழிபட்டார். கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
பவன் கல்யாண் கூறியதாவது : பழநி- திருப்பதி சிறப்பு பஸ் மீண்டும் துவங்கவும், பழநி- திருப்பதி இடையே ரயில் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பதி லட்டு நெய் விவகாரத்தில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். கடவுள் விஷயத்தில் யாரும் இப்படி பண்ணக்கூடாது. ஆன்மிக யாத்திரை சந்தோஷமாக உள்ளது. தமிழக மக்களுக்கு நல்லது நடக்க வழிபாடு செய்துள்ளேன் என்றார். பவன்கல்யாண் மகன் அகிராநந்தனும் உடன் வந்திருந்தார்.

