ADDED : மார் 07, 2025 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்தூர் : வெள்ளையகவுண்டனுார் ஏ.டி., காலனியை சேர்ந்தவர் ஜெயராமன். சென்னையில் உள்ள புத்தக நிலையத்தில் விற்பனையாளராக வேலை பார்க்கிறார்.
இவரது மனைவி விஜயா. வேடசந்துார் தனியார் நுாற்பாலையில் வேலை பார்க்கிறார். இவர்களது 16 வயது மகள் ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
வயிற்று வலி தாங்காமல் நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கூம்பூர் எஸ்.ஐ., விஜயபாண்டியன் விசாரிக்கிறார்.