ADDED : ஆக 21, 2024 08:26 AM
அ நிறம் | அளவு
பழநி : பழநி சுற்றுப் பகுதிகளில் சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு பழநி பகுதிகளில் மழை பெய்தது. முக்கிய சாலைகளில் தண்ணீர் ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். சாலைகளின் சாக்கடை நீர் மழைநீருடன் சேர்ந்து ஓடியதால் பாதசாரியை முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது. பழநி பகுதி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
