ADDED : மே 09, 2026 08:20 PM
அ நிறம் | அளவு
வத்தலக்குண்டு, மே 10-
வத்தலக்குண்டு மதுரை ரோட்டில் இருந்து திண்டுக்கல் ரோடு பைபாஸ் வரை உள்ள நெடுஞ்சாலையை விரிவுபடுத்த தமிழக அரசு சார்பில் ரூ. 6.34 கோடி ஒதுக்கப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி, விரிவாக்கம் , புதிய ரோடு அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடந்தது. இதை நெடுஞ்சாலை மதுரை வட்ட திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் தலைமையில் துறையினர் ஆய்வு செய்தனர். கோட்ட பொறியாளர் சங்கரசுப்பிரமணியம், உதவி கோட்ட பொறியாளர்கள் சுப்பையா, ஆனந்த், அழகர்சாமி, உதவி கோட்ட பொறியாளர்(தரக்கட்டுப்பாடு) சொக்கலிங்கம் உடன் இருந்தனர்.
