ADDED : ஏப் 06, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: பொன்மாந்துறை புதுப்பட்டி பகுதியில் தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலங்குளத்து கரை அருகில் ஒரு கும்பல் தனியாக அமர்ந்திருந்தது.
போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. விசாரணையில் திண்டுக்கல் ஆர்.வி.நகரைச் சேர்ந்த அஜித்குமார்21,முத்தழகுபட்டி குழந்தையேசு24,கிழக்கு மீனாட்சியநாயக்கன்பட்டி பாண்டிய தினேஷ்24,பூபதி ராஜா 25, பொன்மாந்துரை ஜான் பிரிட்டோ49 ,என்பது தெரிந்தது. அவ்வழியில் வரும் வாகனங்களை வழிமறித்து கொள்ளையடிப்பதற்கும் திட்டம் தீட்டியது தெரிந்தது. போலீசார் ஐவரையும் கைது செய்தனர்.

