ADDED : ஏப் 18, 2024 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : அய்யலுார் ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரியில் பி.காம்., சி.ஏ., துறை சார்பில் இந்தியாவின் சரக்கு , சேவை வரி குறித்த கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் திருமாறன் தலைமை வகித்தார். துறைத்தலைவர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். மாணவி பானுப்பிரியா வரவேற்றார்.
விவேகானந்தா கல்லுாரி வணிகவியல் பேராசிரியர்கள் வடிவேல் ராஜா, வீரணன் பங்கேற்றனர். மாணவி நவீனா தொகுத்து வழங்கினார். மாணவி ஹரிணிலட்சுமி நன்றி கூறினார்.

