sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மதுவை நோக்கி பயணிக்கிறது தமிழகம் நல்லசாமி குற்றச்சாட்டு

/

மதுவை நோக்கி பயணிக்கிறது தமிழகம் நல்லசாமி குற்றச்சாட்டு

மதுவை நோக்கி பயணிக்கிறது தமிழகம் நல்லசாமி குற்றச்சாட்டு

மதுவை நோக்கி பயணிக்கிறது தமிழகம் நல்லசாமி குற்றச்சாட்டு


ADDED : பிப் 28, 2025 01:29 AM

Google News

ADDED : பிப் 28, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி:''தமிழகம் மதுவை நோக்கி பயணிக்கிறது,'' என, பழநியில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி குற்றம் சாட்டினார்.

அவர் கூறியதாவது: கள் விடுதலை கருத்தரங்கு திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் கொங்கல் நகரத்தில் நடக்க உள்ளது. இதில் பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அ.ம.மு.க., பொது செயலாளர் தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளனர். தமிழகத்தில் மதுவிலக்கு என்பது இல்லை. ஆனால் மதுவிலக்கு போலீசார் உள்ளனர்.

மதுவிலக்கு போலீசார் கள் இறக்கும் விவசாயிகளிடம் லஞ்சம் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பள்ளிகளுக்கு அருகே போதை வஸ்துகள் எளிதாக கிடைக்கிறது. பீஹாரில் மதுவிலக்கு உள்ளது. இதனால் குற்றங்கள் குறைந்துள்ளன. பீஹாரில் கள்ளச்சாராய மரணத்திற்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் கள்ளச்சாராய இறப்பிற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கி உள்ளனர்.

இது தமிழகத்தை மதுவிலக்கு கொள்கையில் இருந்து மாற்றி மதுவை நோக்கி தமிழகத்தை கொண்டு செல்கிறது. வாக்காளர்கள் பணம் பெற்று ஓட்டு போடும் முறை தமிழக முழுவதும் உள்ளது. இது ஜனநாயகத்தை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும். தேர்தல் ஆணையம் இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us