கன்னிவாடி: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. மூலவர், நந்தி, உற்ஸவருக்கு திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. திருவாசக முற்றோதலுடன் மகா தீபாராதனை நடந்தது. உற்ஸவர் பிரகார வலம், அன்னதானம் நடந்தது. செம்பட்டி கோதண்டராமர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
கொடைக்கானல் : கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பத்திரகாளியம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. கால பைரவருக்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து சொர்ணாபிஷேகம், வடை மாலை சாத்துதல், பக்தர்கள் தேங்காய், மிளகு, நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. தாண்டிக்குடி பாலமுருகன் கோயில் உள்ள காலபைரவர் கோயிலிலும் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.

