ADDED : ஏப் 18, 2024 05:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி முருகன் கோயில் கிரிவலப் பாதையில் மேல்கரைப்பட்டி குமரப்ப சுவாமி கோயில் காளையை அலங்காரத்துடன் பக்தர்கள் அழைத்து வந்தனர்.
பழநியில் பங்குனி உத்திர திருவிழா நிறைவடைந்த போதிலும் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடிகள் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பழநி அருகே மேல்கரைப் பட்டியைச் சேர்ந்தவர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்தனர்.
பாதயாத்திரையாக வந்தவர்கள் மேல்கரைப்பட்டி குமரப்ப சுவாமி கோயில் காளையை மலர்களால் அலங்கரித்து கிரி வீதி வலம் வந்தனர். இதன்பின் இவர்கள் முருகரை தரிசனம் செய்து திரும்பினர்.

