ADDED : ஆக 10, 2026 06:42 PM
அ நிறம் | அளவு
பட்டிவீரன்பட்டி-, ஆக.11
முத்துலாபுரம் அருகே கலியுக சிதம்பர ஈஸ்வரர் கோயிலில் கோபுர கலசம் திருடு போனது.
இக்கோயில் பூசாரி பரணிதரன் நேற்று காலை கோயிலுக்கு சென்றபோது கோபுரத்தில் கலசம் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். புகாரில் பட்டிவீரன்பட்டி போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். மர்மநபர் ஒருவர் நுழைவாயில் அருகே உள்ள கதவைத் திறந்து ஏணி மூலமாக மேலே ஏறி கோயில் கலசத்தை திருடியது தெரிந்தது. கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மூன்று மாதங்களுக்கு முன் அருகில் உள்ள பெருமாள் கோயிலிலும் கலசம் திருடு போனது குறிப்பிடத்தக்கது.
