ADDED : ஜூன் 24, 2026 11:51 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், ஜூன் 25-
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் பள்ளி முடிந்து வீடு திரும்ப மாணவிகள் பலர் நின்று கொண்டிருந்தனர். அங்கு வந்த நபர் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதை பார்த்த மக்கள் அவருக்கு தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், குமரன் திருநகரை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜா 42, துாத்துக்குடியில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்ததும், சில நாட்களுக்கு முன் குமரன் திருநகரில் குடியேறியதும் தெரிந்தது. இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார் அவரை போக்சோவில் கைது செய்தனர்.
இதுபோல் கொடைக்கானல் அண்ணா நகரை சேர்ந்த அருள்பிரகாஷ் 30, தனது உறவினரின் 16 வயது மகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டதால் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
