ADDED : பிப் 22, 2025 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நடந்த கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பழநி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஒட்டன்சத்திரம் அம்பளிக்கை ஸ்டேஷன் பகுதியில் 2013ல் நில பிரச்னை காரணமாக அப்பிய நாயக்கர் 68, கொலை வழக்கில் ஓடைபட்டியை சேர்ந்த பொன்னுச்சாமி 52, கருப்பணக்கவுண்டர் 85, சின்னச்சாமி 59, கைது செய்யப்பட்டனர்.
பழநி நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்த நிலையில் சின்னச்சாமி இறந்தார். பொன்னுச்சாமி கருப்பண்ண கவுண்டருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி மலர்விழி உத்தரவிட்டார்.

