/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்
/
ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 19, 2024 05:57 AM
திண்டுக்கல், : பழநி அய்யம்பாளையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி பழநி அய்யம்பாளையம் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
உடுமலையில் சேம்பர் நடத்தி வரும் ஜெயபிரகாஷ் வாகனத்தை சோதனையிட்டபோது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சம் கைப்பற்றப்பட்டது. இவை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு கருவூலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

