ADDED : மே 24, 2025 03:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: - நத்தம்-அசோக்நகர் பகவதி அம்மன் கோயிலில் உலக நன்மை, மழை வேண்டி சங்காபிஷேகம் நடந்தது.
இதையொட்டி கோயில் வளாகத்தில் 108 சங்குகள் அமைக்கப்பட்டு வில்வ இலைகள், புஷ்பங்களால் அலங்கரிங்கப்பட்டிருந்தது. யாகசாலை அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடந்தது. பின்னர் கோ பூஜைகள் நடந்தது.
மூலவர் பகவதி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், புஷ்பம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.