/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
17ம் நுாற்றாண்டு கல்வெட்டு பழநியில் கண்டெடுப்பு
/
17ம் நுாற்றாண்டு கல்வெட்டு பழநியில் கண்டெடுப்பு
ADDED : ஜன 25, 2026 06:03 AM

பாலசமுத்திரம்: பழநி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 17ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது: மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பாலசமுத்திரம் ரங்க மலை அடிவாரத்தில் செக்காடும்பாறை பகுதியில் போகர் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. தலைவர் தமிழ்நாயகம் வழங்கிய தகவல்படி பாறையில் இருந்த 17ம் நுாற்றாண்டு கல்வெட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் பாளையக்காரர் இம்முடி பட்டத்தை வேலாயுத சின்னோப நாயக்கர் ஆட்சிக்காலத்தில் ஆனி மாதம் பொறிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள விலங்கடியான் கோயில் திருப்பணிக்கு 150 பொன் செலவிடப்பட்டது. சின்ன அய்யம்புள்ளி பகுதியில் நான்கு மா அளவுள்ள நிலம் கொடை அளிக்கப்பட்டது குறித்து தெரிவிக்கிறது.
கல்வெட்டை உருவாக்கியவர் தமண்ணன் ஒட்டன் மகன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
12 வரிகள் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் எழுத்துப் பிழைகள், கல்வெட்டு பகுதி சிதைந்து ஆண்டு, தேதி, பெயர் உள்ளிட்ட முக்கிய வரிகளை அறிய முடியவில்லை. இதன் மூலம் பழநி பாலசமுத்திர பகுதி பாளையக்காரர்களின் ஆட்சி முறை,
ஆன்மிக சேவையை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது என்றார்.

