ADDED : பிப் 06, 2026 06:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை, நிலக்கோட்டை அருகே 20 மாட்டு வண்டி,டூவீலர்களில் 200 சீர்வரிசை செய்த தாய்மாமனை பார்த்து பொதுமக்கள் அதிசயித்தனர். விவசாய குடும்பத்தை சேர்ந்த செந்தில்குமார் - சகோதரியான மாலியபுரம் அஸ்வினி பிள்ளைகளுக்கு காதணி விழா நடந்தது.
இதற்காக தாய் மாமன் வேல்முருகன், சீராக டூவீலர் உள்ளிட்ட 200க்கு மேற்பட்ட சீர்வரிசை பொருட்களை E. காமாட்சிபுரத்திலிருந்து கொங்கப்பட்டிக்கு 4 கி.மீ., துாரம் 20-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தார்.

