UPDATED : ஜூலை 14, 2026 07:07 PM
ADDED : ஜூலை 14, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
பழநி:பழநி போடுவார்பட்டியை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் செல்வராஜ் 35. இவர் 2022 பிப்.,2ல் டூவீலரில் ஆயக்குடி அருகே சென்றபோது அரசு பஸ் மோதிய விபத்தில் இறந்தார்.
இழப்பீடு கேட்டு அவரது குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூ.43 லட்சத்து 83 ஆயிரத்து 160 வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது. அதனை வழங்காததால் பழநி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனர்.
விசாரித்த நீதிபதி மலர்விழி வட்டியுடன் இழப்பீட்டு தொகையாக ரூ.55 லட்சத்து 84 ஆயிரத்து 428 வழங்க உத்தரவிட்டார். அதனையும் போக்குவரத்து கழகம் வழங்காததால் நீதிபதி உத்தரவின்படி நீதிமன்ற ஊழியர்கள் பழநி பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த மூன்று அரசு பஸ்களை ஜப்தி செய்தனர்.
