/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பண்ணையில் தீ விபத்து 3000 கோழிகள் பலி
/
பண்ணையில் தீ விபத்து 3000 கோழிகள் பலி
ADDED : ஜன 05, 2025 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டிவீரன்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி சித்தரேவைச்சேர்ந்தவர் மணிகண்டன்.  இவர் சித்தையன் கோட்டை ரோட்டில் ஊத்து வாய்க்கால் பகுதியில்  கோழிப்பண்ணை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு  இங்கு தீப்பிடித்த நிலையில்  ஆத்துார் தீயணைப்பு வீரர்கள் தீயை  அணைத்தனர். இதில் 3000க்கும் மேற்பட்ட கோழிகள் கருகி பலியாயின.
மின் கசிவு காரணமாக தீ பிடித்து இருக்கலாம் என  பட்டிவீரன்பட்டி போலீசார்  தெரிவித்தனர். மற்றொரு பகுதியில் இருந்த 3500 கோழிகள் தப்பின.

