நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் நொச்சிஓடைப்பட்டியை சேர்ந்த தம்பதிகள் நல்லுச்சாமி.
மனைவி ரெங்கம்மாள். இவவரும் நத்தம் ரோடு பகுதியில் உள்ள தோட்டத்தில் வசிக்கின்றனர். ஜூன் 9ல் தோட்டத்திலிருந்த ரெங்கம்மாளிடம் மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 2 அரை பவுன் நகையை பறித்து சென்றனர். தாலுகா போலீசார் விசாரணையில் வன்னியப்பாறைப்பட்டியை சேர்ந்த தினேஷ்குமார், அப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த மோகன்ராஜ், 2 சிறுவர்கள் உட்பட நால்வரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்து. போலீசார் நால்வரையும் கைது செய்து அவர்களிடமிருந்து நகையை மீட்டனர்.