ADDED : ஜூலை 17, 2025 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்,: வேலாயுதம்பட்டி பகுதியில் சுற்றி திரிந்த தெருநாய் ஒன்று அங்கு மந்தை வழியாக நடந்து சென்ற 2 குழந்தைகள் உட்பட 8 பேரை கடித்து குதறியது. வேலாயுதம்பட்டியை சேர்ந்த பூவன் அடைக்கன் 85, லெட்சுமி 40, கெளசிக் 5, ரித்திகா 2, செல்வம் 29, கருப்பையா 60, வீரன்பூசாரி 65, அடைக்கன் 55, உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தனர்.
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். உள்ளாட்சி நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.