/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோயிலில் கேட்பாரற்று பையில் கிடந்த குழந்தை
/
கோயிலில் கேட்பாரற்று பையில் கிடந்த குழந்தை
ADDED : டிச 27, 2025 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை: புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள விநாயகர் கோயில் வளாகத்தில் பை ஒன்று கிடந்தது. அதிலிருந்து குழந்தை அழுகுரல் கேட்டது. அவ்வழியே சென்ற பெண் ஒருவர் சென்று பார்த்த போது திடுக்கிட்டார். அங்கு, பிறந்து சில மணி நேரமான பெண் குழந்தை இருந்தது.
திருக்கோகர்ணம் போலீசார், குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் குழந்தையை மீட்டனர். விட்டுச்சென்றவர்கள் குறித்து மேல்விசாரணை நடக்கிறது

