sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அருப்புக்கோட்டையை சேர்ந்த நபர் கைது

/

ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அருப்புக்கோட்டையை சேர்ந்த நபர் கைது

ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அருப்புக்கோட்டையை சேர்ந்த நபர் கைது

ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அருப்புக்கோட்டையை சேர்ந்த நபர் கைது


ADDED : பிப் 11, 2025 07:46 AM

Google News

ADDED : பிப் 11, 2025 07:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : துாத்துக்குடியிலிருந்து ஈரோடுக்கு ரயில் பயணித்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அருப்புக்கோட்டையை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் பழைய கரூர் ரோடை சேர்ந்தவர் 26 வயதான இளம்பெண். துாத்துக்குடியில் தனியார்பயிற்சி மையத்தில் தங்கி படிக்கிறார். நேற்று முன்தினம் இளம்பெண்ணின் தந்தைக்கு உடல்நிலை சரி இல்லாததால் துாத்துக்குடியிலிருந்து ஈரோடு வழியாக செல்லும் ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் பயணித்தார்.

விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் மதுபோதையில் அருப்புகோட்டையை சேர்ந்த லோடு மேன் சதீஷ்குமார் ரயிலில் ஏறியுள்ளார். கொடைரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே வரும் போது இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.

அதிர்ச்சியடைந்த அப்பெண் ரயிலில் ஒட்டப்பட்டிருந்த உதவி எண் 139 எண்ணில் தொடர்பு கொண்டு புகாரளித்தார்.

அவர்கள் திண்டுக்கல் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைசாமி தலைமையிலான போலீசார், ரயில் திண்டுக்கல் வந்தபோது அதிகாலை 3:30 மணிக்கு சதீஷ்குமாரை கைது செய்தனர்.

சில தினங்களுக்கு முன் ரயிலில் ஆந்திரா சென்ற கர்ப்பிணிக்கு வேலுார் அருகே சிலர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் அடங்காத நிலையில் திண்டுக்கல் பகுதியிலும் பெண்ணுக்கு ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்து வாலிபர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us