ADDED : நவ 30, 2024 05:48 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்; திண்டுக்கல் ஒன்றிய அலுவலகத்தில் புதிய ஆதார் மையத்தை பழநி எம்.எல்.ஏ.,செந்தில்குமார் திறந்து வைத்தார்.ஒன்றிய தலைவர் ராஜா தலைமை வகித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், ராஜசேகரன் முன்னிலை வகித்தனர். 286 துாய்மை பணியாளர்களுக்கு மழை பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டது. ஒன்றிய துணை தலைவர் சோபியா ராணி, ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை, மாவட்ட துணை செயலாளர் பிலால் உசேன், பொதுக்குழு உறுப்பினர் அக்பர், பொருளாளர் சரவணன், விவசாய அணி அமைப்பாளர் கண்ணன், இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம், மாவட்ட கவுன்சிலர் பரமேஸ்வரி, ஊராட்சி தலைவர்கள் பரமன், சித்ரா ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.
