/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நான்கு வழிச்சாலையில் உயரம் குறைந்த டிவைடர்கள் விபத்துக்களை முற்றிலுமாக தடுக்க தேவை நடவடிக்கை
/
நான்கு வழிச்சாலையில் உயரம் குறைந்த டிவைடர்கள் விபத்துக்களை முற்றிலுமாக தடுக்க தேவை நடவடிக்கை
நான்கு வழிச்சாலையில் உயரம் குறைந்த டிவைடர்கள் விபத்துக்களை முற்றிலுமாக தடுக்க தேவை நடவடிக்கை
நான்கு வழிச்சாலையில் உயரம் குறைந்த டிவைடர்கள் விபத்துக்களை முற்றிலுமாக தடுக்க தேவை நடவடிக்கை
ADDED : டிச 05, 2025 05:27 AM

வேடசந்துார்: நான்குவழிச்சாலை டிவைடர்கள் உயரம் குறைவாக உள்ளதால் கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்கள், ஒரு ரோட்டில் இருந்து மற்றொரு ரோட்டிற்கு செல்வதால் பெரும் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது. இவற்றை முற்றிலுமாக தவிர்க்க டிவைடர் உயர்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்திய அளவில் நெடுஞ்சாலைகள் தரம் உயர்த்தப்பட்டு நான்கு வழி சாலைகளாக மாற்றம் பெற்றுள்ளன.
இதனால் வாகன ஓட்டிகள் சிரமமின்றி தங்களது போக்குவரத்தை தொடர்கின்றனர். இரு வழி சாலைகள் நான்கு வழி சாலைகளாக மாற்றி அமைக்கப்பட்ட புதிதில் வாகனங்களின் வேகமான போக்குவரத்து காரணமாக ரோட்டை கடக்கும் மக்கள் அடிக்கடி விபத்துக்கு ஆளாகினர்.
அதேபோல் எண்ணற்ற இடங்களில் பிரிவு ரோடுகளில் மேம்பாலங்கள் அமைக்காததாலும் விபத்துக்கள் இன்றளவும் தொடர்கின்றன.
அடிக்கடி விபத்து தற்போது டூவீலர் வாகன ஓட்டிகள் , ரோட்டை கடந்து, நடந்து செல்வோர் ஓரளவு தெளிவு பெற்று விட்டனர். இதனால் இத்தகைய விபத்துக்கள் குறைந்து விட்டன. ஆனால் இன்னும் வாகனங்கள் மோதி கொள்வது, ஒரு ரோட்டில் செல்லும் வாகனங்கள் நடுவில் உள்ள டிவைடரை கடந்து மறு ரோட்டிற்கு செல்வது அவ்வப்போது தொடர்கிறது.
இது போன்ற சம்பவம் திண்டுக்கல் - கரூர் நான்கு வழி சாலையில் அடிக்கடி நடைபெறுகிறது. மூன்று நாட்களுக்கு முன்பு கன்டய்னர் லாரி ஒன்று ரோட்டை கடந்து எதிரே வந்த பஸ் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. நெடுஞ்சாலை துறையினரும் போலீசாரும், விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்து வழக்கு பதிந்து முடித்து விடுகின்றனர். ஒரு ரோட்டில் செல்லும் வாகனம் டிவைடரை தாண்டி அடுத்த ரோட்டிற்கு சென்று எதிரே வரும் வாகனத்துடன் மோதி கொள்வது அடிக்கடி நடைபெறுகிறது.
ரோட்டிலே நிற்கும் இந்த விபத்துகளுக்கு எல்லாம் முக்கிய காரணம் டிவைடர் போதிய உயரம் இல்லாததே ஆகும். ரோடு புதிதாக அமைக்கும்போது ஒரு அடி உயரத்தில் டிவைடர் அமைக்கிறார்கள். ரோட்டை அடுத்தடுத்து புதுப்பிக்கும் போது இதன் உயரம் குறைகிறது.கனரக வாகனங்களின் வேகம், கட்டுப்பாடற்ற தன்மை போன்றவற்றால் ஒரு அடி டிவைடரை எளிதாக தாண்டி அடுத்த ரோட்டிற்கு வாகனங்கள் சென்று விடுகின்றன. இரண்டு அல்லது மூன்று அடி உயரத்தில் அமைத்திருந்தால் வாகனங்கள் முட்டி, மோதி செல்லும் ரோட்டிலே நிற்கும் . அடுத்த ரோட்டிற்கு செல்ல வாய்ப்பில்லை தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் இதன் மீது கவனம் செலுத்த வேண்டும்.

