ADDED : நவ 09, 2025 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் சிறப்பு தீவிர வாக்களர் பட்டியல் திருத்தத்தில் கட்சியினர் செய்ய வேண்டிய பணிகள், தொகுதி வாரியான தேர்தல் வளர்ச்சி பணிகள் குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
முன்னாள் மேயர் மருதராஜ், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் வி.பி.பி. பரமசிவம் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ.க் கள், பழனிச்சாமி, பிரேம்குமார், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜமோகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன், ஒன்றிய செயலாளர் ராஜசேகர் கலந்துக் கொண்டனர்.

