ADDED : ஜன 18, 2025 07:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரியோடு : எரியோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 1997ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் நிர்மலா தலைமை வகித்தார். முன்னாள், தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவர்களது குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர். போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கினர். விளையாட்டு போட்டிகளில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு, வகுப்பறைக்கான பென்ச், டெஸ்க்கள் உள்ளிட்ட பள்ளி உபகரணங்களை வழங்கினர்.