ADDED : ஏப் 14, 2025 05:52 AM

அ நிறம் | அளவு
வடமதுரை:வடமதுரை மங்கம்மாள் கேணி பூக்குழி திடலில் நுாறாண்டுகள் பழமை வாய்ந்த சர்வ சக்தி விநாயகர் கோயில் உள்ளது.
தகர கூரையுடன் திறந்தவெளியாக இருந்த இக்கோயில் ஊர்மக்கள் சார்பில் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்த நிலையில், நட்சத்திர அடிப்படையில் நேற்று வருடாபிஷேகம் நடந்தது. விக்னேஷ்வர, கணபதி, மகாலட்சுமி பூஜைகள், திருமஞ்சனம் உள்ளிட்ட வழிபாடுகளை கோயில் அர்ச்சகர் நாராயணன் நடத்தி வைத்தார். மக்கள் திரளாக பங்கேற்றனர்.
