ADDED : ஆக 15, 2025 02:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்:நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி,என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி நாட்டுநலப்பணித்திட்டத்தின் சார்பாக போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் துவங்கிய இதற்கு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் சரவணன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஆ.சிவக்குமார், சுந்ததராஜன், செல்வி கார்த்திகா முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் எஸ்.பி.,பிரதீப், துணைக்கண்காணிப்பாளர் கார்த்திக் நந்தகுமார் துவக்கி வைத்தனர்.