ADDED : ஜன 25, 2025 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னிவாடி : உலக கலைகள் ,விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் மாவட்ட அளவிலான தனியார் பள்ளி மாணவர்களுக்கான சிலம்ப போட்டி நிலக்கோட்டை கே.சி.எம்., மெட்ரிக் பள்ளியில் நடந்தது.
தருமத்துப்பட்டி டி.எம்.பி., துவக்கப்பள்ளி மாணவர்கள் 31 பேர் பரிசு பெற்றனர்.
இவர்களுக்கான பாராட்டு விழா பள்ளி தாளாளர் ஆர்.கே.சுப்ரமணி தலைமையில் நடந்தது.
மக்கள் தொடர்பு அலுவலர் முருகையா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் செல்வி வரவேற்றார்.

