ADDED : ஆக 07, 2026 04:10 AM
அ நிறம் | அளவு
சின்னாளபட்டி: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு திரவிய அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம், அஷ்டோத்திர பூஜை, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல் செம்பட்டி கோதண்டராமர் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
திண்டுக்கல்: தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
