/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
' கொடை' மலர் கண்காட்சியில் கவரும் 'ஆசியாட்டிக் லில்லியம்'
/
' கொடை' மலர் கண்காட்சியில் கவரும் 'ஆசியாட்டிக் லில்லியம்'
' கொடை' மலர் கண்காட்சியில் கவரும் 'ஆசியாட்டிக் லில்லியம்'
' கொடை' மலர் கண்காட்சியில் கவரும் 'ஆசியாட்டிக் லில்லியம்'
ADDED : மே 30, 2025 12:58 AM

கொடைக்கானல்:கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் பூத்துள்ள 'ஆசியாட்டிக் லில்லியம் ' பூக்களை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.
கொடைக்கானலில் மே 24 முதல் மலர் கண்காட்சி நடந்து வருகிறது. இங்கு பூத்துள்ள லட்சக்கணக்கான மலர்கள் , பூக்கள், காய்கறிகள், பழங்களாலான வடிவமைப்புகளை பயணிகள் ரசித்தனர்.
நெதர்லாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட 'ஆசியாட்டிக் லில்லியம் ' பூக்கள் மலர் கண்காட்சிக்காக சில மாதங்களுக்கு முன் நடவு செய்யப்பட்டன. தற்போது இவை பார்வையாளர் அரங்கில் மஞ்சள், ஆரஞ்சு, பிங்க், வெள்ளை, சிவப்பு உள்ளிட்ட 5 நேரங்களில் அழகுற பூத்து குலுங்குகிறது. இப்பூக்கள் பூத்ததில் இருந்து இரு வாரங்கள் வாடாமல் நறுமணம் கமழும். மலர் கண்காட்சிக்கு வந்த சுற்றுலா பயணிகளை இம்மலர்கள் வெகுவாக கவர்ந்து உள்ளதால் இதனருகே நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மலர் கண்காட்சி ஜூன் 1 வரை நடைபெறுகிறது.