ADDED : நவ 15, 2025 05:41 AM
அ நிறம் | அளவு
பழநி: பழநி பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ விபத்துக்குள்ளானதில் 11 சிறார்கள் காயமடைந்தனர். இதை தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஸ்ரீதர் தலைமையில் பள்ளி சிறார்களை ஏற்றி செல்லும் ஆட்டோக்களின் ஆவணங்களை ஆய்வு செய்தனர். மூன்று ஆட்டோக்களுக்கு ஆவணங்கள் முறையாக இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.
அளவுக்கு அதிகமான சிறார்களை ஏற்றி சென்ற நான்கு ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
