/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பாதிப்பில் அவகடா விவசாயம்
/
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பாதிப்பில் அவகடா விவசாயம்
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பாதிப்பில் அவகடா விவசாயம்
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பாதிப்பில் அவகடா விவசாயம்
ADDED : பிப் 11, 2026 06:27 AM

தாண்டிக்குடி: தாண்டிக்குடி மலைப்பகுதியில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் அவகடா விவசாயம் பாதித்துள்ளது.
இம்மலைப்பகுதியில் காபி சாகுபடிக்கு மத்தியில் ஊடுபயிராக அவகடா விவசாயம் செய்யப்படுகிறது. பொருளாதார ரீதியாக விவசாயிகளுக்கு பலனளித்தது. துவக்கத்தில் மார்க்கெட்டில் குறைந்த விலைக்கு விற்ற அவகடா நாளடைவில் மதிப்புக்கூட்டுப் பொருள் ஐஸ்கிரீம், பேசியல் பயன்பாட்டினால் விலை அதிகரித்தது. கூடுதல் பரப்பில் இவ்விவசாயம் செய்யப்பட்ட போதும் மானாவாரி சாகுபடியான இதில் தண்டுத்துளைப்பான், வேர் தாக்குதல் உள்ளிட்டவற்றால் மரங்கள் காய்ந்து வருகிறது. மலைப்பகுதியில் வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யாத நிலையில் முன்கூட்டியே வறட்சி ஏற்பட்டுள்ளது.
அவ்வப்போது பருவம் தவறி பெய்யும் மழையால் பூ, பிஞ்சுகள் உதிர்ந்து விளைச்சல் பாதித்துள்ளது. அவகடா சாகுபடியில் தொடரும் பாதிப்பு குறித்து தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு செய்து தொழில்நுட்ப ஆலோசணைகளை வழங்கி புத்துயிர் அளிக்க வேண்டும்.

