நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் என்.எஸ்.எஸ்., இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் இணைய வழி குற்றம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார்.
குழந்தைகளுக்கு வளர்ந்து வரும் அச்சுறுத்தல், விழிப்புணர்வு எவ்வாறு உதவும் என்பது பற்றி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா பேசினார். குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி , இணைய குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் தினேஷ் பிரபு பேசினர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் முத்துக்குமார், ஒருங்கிணைப்பாளர் நாகமணி, இளம் செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் தேவன் பங்கேற்றனர்.

