ADDED : டிச 27, 2025 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: குஜிலியம்பாறை ராமநாதபுரத்தில் சமூகநல பாதுகாப்புத்துறை, சைல்டு லைன், ஹெல்ப்ஸ் தன்னார்வலர் நிறுவனம் சார்பில் பெண்கள் முன்னேற்றம், சுற்றுப்புறம், பாதுகாப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தன்னார்வலர் நிறுவன நிர்வாக உறுப்பினர்கள் சகாய செல்வராஜ், யூஜின் தலைமை வகித்தனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர் அம்பிகா, சைல்டு லைன் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், பிரவீன், ஒன் ஸ்டாப் சென்டர் அதிகாரி தாரணி கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளர்கள் நிஜித்ரா, ஜீவா, பீரீத்தா, கிருத்திகா செய்திருந்தனர்.

