ADDED : ஜன 23, 2026 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: தென்னம்பட்டியில் குழந்தை திருமணம் தடுப்பு, விடலை பருவ கர்ப்பம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் நாகேந்திரன் தலைமை வகித்தார். பிலாத்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சுபஸ்ரீ, செவிலியர்
லதா, சுகாதார புள்ளியிலாளர் பாலசுப்பிரமணி பங்கேற்றனர். முகாமில் பங்கேற்ற 85 பெண்கள் உயர் வரிசை பிறப்பு தடுத்தல், குழந்தை திருமணம், விடலைப் பருவ கர்ப்பம் தடுக்க உறுதிமொழி எடுத்தனர்.

