ADDED : மார் 06, 2024 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை, : அய்யலுார் தங்கம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
அடுத்த கல்வி ஆண்டிற்காக 10 மாணவர்கள் முதல் வகுப்பில் வட்டார கல்வி அலுவலர் நல்லுச்சாமி முன்னிலையில் சேர்ந்தனர். பள்ளி மேலாண்மை குழு தலைவர் அபிராமி, தலைமை ஆசிரியை அனுராதா, பேரூராட்சி கவுன்சிலர் மாலா, பி.டி.ஏ., தலைவர் பானுமதி, கிராம மக்கள் பங்கேற்றனர்.

