ADDED : ஜன 31, 2026 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ். மாணவர்கள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளி தாளாளர் சேசுஆரோக்கியம் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். நிர்வாக அலுவலர் பிரிட்டோ முன்னிலை வகித்தார்.
துணை முதல்வர் ஞானசீலா வரவேற்றார். திட்ட அதிகாரி ஜூலியட் ரோஸ், உதவித் திட்ட அதிகாரி மணிகண்டன், ஆங்கில ஆசிரியர் ஸ்டாலின் பங்கேற்றனர். தொடர்ந்து நடந்த கருத்தரங்கை, பி.டி.ஓ., இளையராஜா துவக்கி வைத்தார். மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள், ராஜக்காபட்டி கிராம சுகாதார செவிலியர் பாண்டிமாதேவி, மதுவிலக்கு ஏட்டு அன்பு முருகன் பங்கேற்றனர்.

