ADDED : பிப் 21, 2026 07:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் என்.பி.ஆர்., பொறியியல்,தொழில்நுட்பக் கல்லுாரி, கலை,அறிவியல் கல்லுாரி நாட்டுநலப்பணித்திட்டத்தின் சார்பாக சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பஸ் ஸ்டாண்ட் அருகில் தொடங்கி திண்டுக்கல்- - மதுரை சுற்றுப் புறச்சாலை வழியாக நடந்தது. 200 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி., இளஞ்செழியன், வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் வைரமணி, வாகன ஆய்வாளர் சிவக்குமார் தொடங்கி வைத்தனர். என்.பி.ஆர்., கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் சரவணன் முன்னிலை வகித்தார்.என்.பி.ஆர்., நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் சிவக்குமார், பாண்டியராணி, ராஜேஷ்கண்ணா கலந்து கொண்டனர்.

