ADDED : மார் 14, 2026 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்தையன்கோட்டை: சேடபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார்.
பேரூராட்சி கவுன்சிலர்கள் லீலாவதி, சாந்தி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சவுதாமணி முன்னிலை வகித்தனர்.
வட்டார கல்வி அலுவலர் முத்தம்மாள் துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி, உதவி ஆசிரியர்கள் புவனேஸ்வரி, ராமு, விமலா, ரமாபிரபா செய்திருந்தனர்.

