ADDED : ஜூன் 25, 2026 11:22 PM

திண்டுக்கல்; மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் குழந்தை திருமணம் தடுப்பு, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பு, பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தை டி.ஆர்.ஓ., ஜெயபாரதி கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் பங்கேற்ற எம்.வி.எம்., முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லுாரி மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகள், பேனர்களை ஏந்திச்சென்றனர்.
ஆர்.டி.ஓ., பழநிவேல், மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் காலின்செல்வராணி, கல்லுாரி முதல்வர் லெட்சுமி, பேராசிரியர் சண்முகவேல், திண்டுக்கல் டிராபிக் இன்ஸ்பெக்டர் வள்ளியம்மாள், மேற்கு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மீனாட்சி, சமூகநலத்துறை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன், பணியாளர்கள் பங்கேற்றனர்.
