ADDED : ஜூலை 04, 2026 06:09 AM
அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் என்.பி.ஆர்., பொறியியல், தொழில்நுட்பக்கல்லுாரி, என்.பி.ஆர்., கலை, அறிவியல் கல்லுாரி சார்பில் போதைப்பொருளுக்கு எதிராக நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.
என்.பி.ஆர்., கலை கல்லுாரி முதல்வர் சரவணன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் சிவக்குமார், சங்கரழகு முன்னிலை வகித்தனர்.
பேரணியை எஸ்.பி., ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
பேரணி திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து துவங்கி பூ மார்க்கெட், அரசு மருத்துவமனை வழியாக வடக்கு காவல் நிலையத்தில் முடிந்தது. மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், போலீசார் பங்கேற்றனர்.
