ADDED : செப் 11, 2026 09:02 PM
திண்டுக்கல், செப்.12
‘நமது அங்கன்வாடி நமது பொறுப்பு’ என்ற கருப்பொருளில் நாடு முழுவதும் செப்.,9 முதல் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்படுகிறது. அதன் ஒருபகுதியாக மாவட்ட ஐ.சி.டி.எஸ்., திட்டம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. கலெக்டர் துர்கா கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் துவங்கி மாநகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது.
ஐ.சி.டி.எஸ்., அலுவலர்கள், களப்பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். ஐ.சி.டி.எஸ்., மாவட்டத் திட்ட அலுவலர் காந்திமதி, மாவட்ட சமூகநல அலுவலர் காலின் செல்வராணி, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் பங்கேற்றனர்.
