நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு,கண்காணிப்பு மையமும்,திண்டுக்கல் பண்ணை பார்மசி கல்லுாரியும் இணைந்து தேசிய ஆயுஷ் மருந்து பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை அனுசரிக்கும் விதமாக பண்ணை கல்லுாரியில் கருத்தரங்கம் நடந்தது.
திண்டுக்கல் மாவட்ட ஆயுஷ் மருந்து ஆய்வாளர்,மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சிவக்குமார்,மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு துறை ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன்,ஆயுஷ் மருந்து பாதுகாப்புத்துறை மருத்துவர் பாலமுருகன் பேசினர். பண்ணை பார்மசி கல்லுாரி சேர்மன் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.
முதல்வர் கணேசன், வைஸ் சேர்மன் ஸ்ரீனிவாஸ் நிரஞ்சன், தலைமை செயல் அலுவலர் கோகுலகிருஷ்ணன் பங்கேற்றனர்.