ADDED : நவ 29, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: நி.பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பசுமை பள்ளித்திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகள் தயாரிப்பு பணிமனை நடந்தது.
பிளாஸ்டிக் மாற்றாக மக்கும் பொருட்களை வைத்து பைகள் தயாரிக்கும் பணிமனையில் அனைத்து மாணவர்களும் பங்கேற்றனர்.
கலை ஆசிரியை சண்முகமலர் பயிற்சி வழங்கினார். மாணவர்களுக்கு சான்றிதழ்,பரிசுகள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் பீட்டர் தலைமை வகித்தார்.
ஆசிரியைகள் செல்வகுமாரி,ரேணுகா பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர்கள் அந்தோணி சுரேஷ் தாஸ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை வேளாண் ஆசிரியர் மகேஸ்வரன் செய்தார்.